விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் (Vistara Airlines), இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, இவ்வழித்தடத்தில் இருந்து நேரடி தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது.
டெலிகிராமில் இந்த வேலையா…பிடிபட்டால் மரண தண்டனை கூட கிடைக்கும் – தற்போது பிடிபட்ட 32 பேர்
டெல்லி, மும்பை ஆகியவைத் தொழில் நகரங்கள் என்பதால், இந்த விமான சேவையை வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இதனால் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான வர்த்தகம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில், இவ்வழித்தட விமான சேவைக்கான மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு என்ற அதிகாரப்பூர்வ https://www.airvistara.com/in/en என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தினசரி ஒன்றுக்கும் மேற்பட்ட விமான சேவையை இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.