குறிப்பிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானம் – கட்டணங்கள் உயர்வு..!

சீனாவின் தலைநிலத்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், அடுத்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) முதல் சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கும்.

இது அடுத்த மாதம் நவம்பர் 6 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 8,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு 7 புதிய தங்கும் விடுதிகள்.

COVID-19 சோதனை

சிங்கப்பூருக்கு நேரடி விமானத்தில் பயணம் செய்வதையும், சிங்கப்பூருக்குள் நுழைந்ததும் COVID-19 சோதனைக்கு உட்படுத்தப்படுவதையும் பயணிகள் கடைபிடிக்க வேண்டும்.

சோதனையில் கிருமித்தொற்று இல்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் (SHN) இருக்க வேண்டியதில்லை.

கட்டணங்கள்

சீன நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோ போன்றவற்றிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி ஒரு வழி விமானங்களுக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6ஆம் தேதி Juneyao ஏர்லைன்ஸில் ஷாங்காயிலிருந்து ஒரு வழி விமானத்தின் கட்டணங்கள் S$2,311 ஆகும்.

ஆனால், Juneyao ஏர்லைன்ஸ் வலைத்தளமே ஒரு நேரடி விமானத்திற்கு கிட்டத்தட்ட S$2,500 கட்டணம் காட்டுகிறது.

கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர், குவாங்சோவைப் பொறுத்தவரை Scoot விமானத்தில் நவம்பர் 8ஆம் தேதி முதல் ஒரு வழி நேரடி விமானத்தின் கட்டணம் S$1,010 ஆக இருந்தது.

ஆனால், Scoot விமானத்திற்கு நேரடியாக முன்பதிவு செய்வதற்கு முந்தய கட்டணத்திற்கு பதிலாக S$1,240 காட்டுகிறது.

லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு உணவகத்தை மூட உத்தரவு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…