நாட்டின் நான்காவது தலைமுறை அமைச்சர்களின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கீயட்டின் தன்னலமற்ற முடிவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் நன்றி தெரிவித்துள்ளார்.
தாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே, தேசத்தின் நலன்களுக்காக நீண்ட காலத்துக்கு வழிநடத்திச் செல்லக்கூடிய இளைய தலைவருக்கு வழிவிட்டு விலகுவதாக திரு ஹெங் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டு காலம் தம்முடைய குழுவில் முக்கிய உறுப்பினராக திரு. ஹெங் இருந்தார் என்று திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
அந்த தலைமைப் பொறுப்பிற்கு புதிய நபர் நியமிக்கப்படும் வரை அவர் பதவியில் இருப்பதாக ஒப்புக்கொண்டார் என அவர் கூறியுள்ளார்.
மேலும், திரு. ஹெங் நாட்டின் துணைப்பிரதமராகவும், பொருளாதார கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தொடர்ந்து பணியாற்றுவார்.
கொரோனா காலக்கட்டத்தில் திரு. ஹெங் அவர்களின் மகத்தான சமூக பணிகளுக்கு பிரதமர் லீ நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வேலைகள்” – போலி வேலை விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை