போக்குவரத்து காவலரை மோதிவிட்டு தப்பிய இருவர் கைது – (காணொளி)

Driver hits Traffic Police
Roads.sg Facebook page & Twitter

சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பர் பயா லேபார் (Upper Paya Lebar) சாலைக்கும் அருகில் சோதனைக்காக காரில் சென்ற அவர்களை தடுக்க முயன்ற அதிகாரியை மோதிய பின்னர் அந்த நபர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.

சிங்கப்பூரில் மேலும் 15 பேர் கொரோனா தொற்றால் மரணம்

நேற்று அக்டோபர் 28 அன்று காலை 9:50 மணியளவில் Geylang East Central பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் Roads.sg என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் அதிகாரிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் போலீசார் மதர்ஷிப்பிடம் தெரிவித்தனர்.

 

34 வயதுடைய பயணி ஒருவர் பொது ஊழியருக்கு எதிராக செயல்பட்டதாகவும், மேலும் போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்தின்பேரிலும் கைது செய்யப்பட்டார்.

மேலும், 37 வயதான ஓட்டுநர் தப்பிவிட்டதாகவும், ஆனால் சோதனை நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்திய ஊழியர்களை பெரிதும் சார்ந்துள்ள நிறுவனங்கள் – கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மகிழ்ச்சி