பையை தொலைத்துவிட்டு வாடும் ஓட்டுநர்.. தன்னை மட்டுமே நம்பி குடும்பம் இருப்பதாக வேதனை – திருப்பி தரும்படி வேண்டுகோள்!

Aisyah Lim

ஆயிசா லிம் என்ற பேஸ்புக் பயனர், தனது கணவரின் பை திருடப்பட்டதாக கூறி அதனை திருப்பி/கண்டுபிடித்து தர வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.

போலீஸ் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரின்படி, முஹம்மது நஸிரீன் பின் ரைமி என்ற ஆடவரின் பையை காணவில்லை என கூறப்படுகிறது.

ஆர்ச்சர்ட் சாலையில் பல கடைகளில் கைவரிசை காட்டிய ஆடவர் – ஸ்கெட்ச் போட்டு கைது செய்த போலீஸ்

லிம்மின் கணவர் கோஜெக் ஓட்டுநர் ஆவார். அவரது கோச் ஸ்லிங் பையை தான் காணவில்லை, காணாமல் போவதற்கு முன்பு ஏப்ரல் 26 அன்று இரண்டு பயணிகளை அவர் ஏற்றிச் சென்றார்.

அதில் அவரது wallet, கார் சாவி, வீட்டு சாவி, NRIC, மூன்று வங்கி அட்டைகள், thumb டிரைவ், பர்ஸ் மற்றும் S$526 ரொக்கமும் இருந்தது.

நோன்பு பெருநாள் நெருங்கும் வேளையில் இந்த சம்பவம் முழு குடும்பத்திற்கும் அதிக கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று லிம் கூறினார், ஏனெனில் நஸிரீன் குடும்பத்தின் ஒரே உழைப்பாளி.

அவர்களுக்கும் இரண்டு சிறு குழந்தைகளுக்கும் உள்ளதாகவும், அவர் காலையிலிருந்து இரவு வரை வாகனம் ஓட்டி தன் குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

பையை திருப்பிக்கொடுத்து உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தான் ஓட்டிய கனரக வாகனம் தனக்கே எமனாய் வந்த சோகம் – தமிழக ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்