ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள கடைகள் பலவற்றில் ஆடம்பரப் பொருட்களைத் திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் 29 வயதுமிக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப். 26) அறிக்கையில் தெரிவித்தனர்.
கடந்த ஏப்., 22 முதல் 25ம் தேதி வரை நடந்த திருட்டு சம்பவத்தில், தோல் பைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு பல புகார்கள் வந்தன.
திருடப்பட்ட அந்த பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் S$34,860 இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
பின்னர், விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை கண்டறிந்து நேற்று அவரை கைது செய்தனர்.
குடியிருப்புகளில் திருடியதாக அவர் மீது இன்று புதன்கிழமை (ஏப். 27) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
இதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.