போதைப்பொருள் நடவடிக்கையில் தொடர்புடைய 3 ஆடவர்கள் பிடிபட்டனர் – அதன் மதிப்பு S$162,000

drug-raid-heroin-arrested
CNB

போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கையில் 3 ஆடவர்கள் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

இந்த சோதனையில் 2 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அதனை அடுத்து 20, 21 மற்றும் 22 வயதுடைய 3 சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கட்டுமானத் துறை Work permit ஊழியர்கள் தான் டாப் – அதிகரிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மதியம் யூனோஸ் கிரசென்ட் அருகே 21 வயது இளைஞரைக் கைது செய்ததாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் பின்னர், முதல் ஆடவரின் கூட்டாளிகள் என்று நம்பப்படும் 20 மற்றும் 22 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சுமார் 2.312 கிலோ ஹெராயினை CNB அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த தெரு மதிப்பு S$162,000 எனவும் CNB தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் உடல் மலேசியா சென்றது… கண்ணீரில் மிதந்த குடும்பம்!