யிஷூனில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகவும், நள்ளிரவில் வாகனத்தில் ஹாரன் சத்தத்தை தொடர்ந்து எழுப்பிய சந்தேகத்தின் பேரிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
128 யிஷூன் ஸ்ட்ரீட் 11இல் நேற்று (ஜன.23) அதிகாலை 2 மணியளவில் கார் ஒன்றில் ஹாரன் சத்தம் இடைவிடாது கேட்டதாக Mothership வாசகர் கூறியுள்ளார்.
மேற்கூறிய திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் உதவி வேண்டி அழைப்பு விடுக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
பின்னர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 40 வயது ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்களிடையே அடிதடி: “பொழைக்க வந்த இடத்துல இதல்லாம் தேவையா?” – சக ஊழியர்கள் காட்டம்