வெளிநாட்டு ஊழியர்களிடையே அடிதடி: “பொழைக்க வந்த இடத்துல இதல்லாம் தேவையா?” – சக ஊழியர்கள் காட்டம்

fight-dormitory-changi

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் ஊழியர்களுக்குள் நடந்த சண்டை குறித்து சக ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த சண்டை குறித்து ஊழியர்கள் கூறுகையில்; “பிழைக்க வந்த இடத்தில் நமக்கு தேவையில்லாத ஒன்று” என பலர் கருத்து கூறி வருகின்றனர்.

“சுத்தியலை வச்சி மண்டையை உடைச்சிருவேன்” – பணியில் இருந்த ஊழியர்களுக்கு மிரட்டல்

மேலும், இது நம்முடைய தாய் நாடு குறித்து அவப்பெயரை ஏற்படுத்தி தரும் என்றும் சிலர் கூறினர்.

சாங்கியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் நடந்த சண்டையில் ஈடுபட்ட ஒன்பது ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சண்டையிட்டுக் கொண்டவர்கள் வெவ்வேறு நாட்டை சேர்ந்த ஊழியர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

CCTV காட்சிகள் மற்றும் விசாரணைகள் மூலம் கலகத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர்களின் அடையாளங்களை போலீசார் கண்டறிந்தனர்.

Work permit ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம் – 2 நாள் சலுகை