சிங்கப்பூரில் இந்த மார்ச் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுகின்றன என்று சிங்கப்பூர் வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களில் நடுப்பகுதியில் இருந்து, சில நாட்களில் சிறுது நேரம் இடியுடன் கூடிய மழை தீவின் சில பகுதிகளில், அதாவது பிற்பகலில் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வானிலை சேவை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 4 பேருக்கு COVID-19 உறுதி – மொத்தம் 106ஆக உயர்வு..!
“சிங்கப்பூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசும்போது சில நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், மார்ச் முதல் இரண்டு வாரங்களுக்கு ஒட்டுமொத்த மழைப்பொழிவானது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் “இயல்பை விட குறைவாக” இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் தினசரி வெப்பநிலை பெரும்பாலும் 24°C மற்றும் 34°C-க்கு இடையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களில் காற்று மற்றும் மேகங்களைப் பொறுத்து இது 35°C-க்கு அதிகமாக இருக்கும்.
இதையும் படிங்க : மலேசியாவின் 8வது புதிய பிரதமர் முஹைதீன் யாசினுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ வாழ்த்து..!