சிங்கப்பூரில் மின்னணு வணிக மோசடி கும்பல் பல வழிகளில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றன.
அந்த மோசடிகளில் சிக்க மாட்டோம், என்று கம்பீரமாக கூறினாலும் சில வழிகளில் நாம் மோசடி கும்பலிடம் சிக்கி விடுகிறோம்.
சிலர் சலுகையில் வழங்குவதாக கூறி உங்களுக்கு அனுப்பப்படும் செய்தியை நீங்கள் க்ளிக் செய்வதன் மூலம் இந்த மோசடிகளில் சிக்கி விடுகிறீர்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மோசடியில் கிளிக் செய்தவுடன் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.
30 வெள்ளிகளுக்கு 5 டிக்கெட் 10 % தள்ளுபடியில் பெறுவதற்காக பணம் செலுத்தியவுடன் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.
இது போன்ற போலியான டீலர்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம். அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம் மட்டும் உங்கள் பரிமாற்றங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.