சிங்கப்பூரில் வரும் மே 30ஆம் தேதி முதல் எட்டு இடங்களில் அமைந்துள்ள நுழைவுகளில் ERP மின்னணு கட்டணங்கள் 19 நேரங்களில் படிப்படியாக உயர்த்தப்படும்.
இந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் போக்குவரத்தை கண்காணித்ததாக கூறிய நிலப் போக்குவரத்து ஆணையம், கடந்த மார்ச் 29 முதல் வேலையிட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம் போக்குவரத்து வழக்கமான நிலையை எட்டுவதாக குறிப்பிட்டது.
சிங்கப்பூருக்கு இந்த பிளானை போட்டுக்கொடுங்க… $500,000 பிரம்மாண்ட பரிசை தட்டிச் செல்லுங்க!
ஜூன் மாதம் பள்ளி விடுமுறை முடிந்த பிறகு, ஜூன் 27 முதல் மூன்று இடங்களில் ஆறு நேரங்களுக்கு ERP கட்டணம் உயரும்.
மேலும், ஜூன் விடுமுறை காலத்தில் போக்குவரத்து குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் ஏழு இடங்களில், மே 30 முதல் ERP கட்டணங்கள் S$1 ஆக உயர்த்தப்படும்.
ரயில் பெட்டியில் திடீரென வெளியான வெள்ளை புகை… பதற்றத்துடன் இறங்கிய பயணிகள் – காரணம் என்ன?
ஆனால், மே 30 முதல் ஜூன் 27 வரை ஐந்து இடங்களில், 14 நேரங்களில் ERP கட்டணம் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.