சிறுமியிடம் உறுப்பை வெளிக்காட்டி அநாகரிகம்.. வெளிநாட்டவருக்கு சிறை

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் மாணவி ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வெளிநாட்டவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த 24 வயதுமிக்க கூ வெய் யாங் என்ற அவர் மாணவி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்

இந்நிலையில், அவருக்கு 5 மாதம் சிறைத் தண்டனை விதித்து செப்.25 (திங்கட்கிழமை) அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறுமியுடன் லிப்ட்டில் சென்ற போது தனது மர்ம உறுப்பை வெளிப்படுத்தியாக கூ மீது குற்றம் நிரூபணமானது.

மேலும் அதை சிறுமியின் முழங்கையில் வைத்து உரசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அவருக்கு எதிராக சிறுமி அடுத்த நாளே காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று நடந்தது.

லிட்டில் இந்தியாவில் “தீபாவளி உணவு சந்தை” – முறுக்கு முதல் ருசியான பிரியாணி வரை இந்திய பாரம்பரியம்

வெற்றிகரமாக தகர்த்தப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: “பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம்” – போலீஸ்