போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவர் கைது!

Singapore passengers-trichy-airport

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த இருவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததால் விமான நிலைய காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (வயது 61) என்பவர் போலியான பெயர் மற்றும் முகவரி கொண்ட போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர்இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை (30.07.2021) அன்று வந்தடைந்தார்.

ஜூரோங் வெஸ்ட்டில் சண்டையிட்டுக்கொண்ட 2 பெண்கள் கைது – (காணொளி)

இதே போன்று, நாகை மாவட்டம், தேத்தங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 45) என்பவர் தனது தந்தையின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர்இந்தியா விமானத்தில் வியாழக்கிழமை (29.07.2021) அன்று வந்தடைந்தார்.

இவர்கள் இருவரும், போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சி வந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அவர்கள் இருவரையும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதிகாரிகள் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்களால் மொத்த வேலைவாய்ப்பு சரிவு