ஓபிர் சாலையில் லாரி மீது மரம் விழுந்து மேற்கூரை நொறுங்கியதில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் மூவரின் நிலை என்ன என்பது தற்போது வெளியாகவில்லை.
சிங்கப்பூர் தீமிதி திருவிழா: பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயம் – முழு விவரம் வெளியீடு
ரோச்சர் கால்வாய் சாலைக்கு அருகிலுள்ள ஓபிர் சாலையில் நேற்று வியாழன் மாலை 6.35 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.
அருகிலிருந்த கிரேன் உதவியுடன், லாரியில் இருந்து மரம் அகற்றப்பட்டதாக SCDF கூறியது.
அதே நேரத்தில் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியதாகவும், அவரை ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காப்பாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இருக்கையில் இருந்து மீட்கப்பட்ட நபர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் இருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் லாரி விபத்துக்கள் யாரால் ஏற்படுகிறது?