மூவரை கொடூரமாக தாக்கிய இருவர் – காப்பிக்கடையில் உதிரம் சொட்ட சொட்ட நடந்த சண்டை

fight coffeeshop-ang-mo-kio

சிங்கப்பூர்: அங் மோ கியோ காபிஷாப்பில் ஞாயிற்றுக்கிழமை (அக். 9) அதிகாலை நேரத்தில் இருவர் மூவரைத் கொடூரமாக தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் குழுவான Complaint Singapore பக்கத்தில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது.

உயிருள்ள கோழி இறைச்சிக்கான ஏற்றுமதி தடையை நீக்குகிறது மலேசியா – கோழி பிரியர்கள் மகிழ்ச்சி

நேற்று அக்டோபர் 9 ஆம் தேதி அதிகாலை 4:15 மணியளவில் பிளாக் 555 Ang Mo Kio Avenue 10ல் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

கடையின் நாற்காலிகளை தூக்கி எறிந்து அவர்கள் தாக்குவதையும், இரத்தம் தோய்ந்த தரைகளையும் வீடியோ வாயிலாக காண முடிகிறது.

அதன் பின்னர் மூன்று பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் SCDF கூறியது.

இதில் 51 முதல் 58 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்திவிட்டு வாயைப்பிளந்து தூங்கிய ஓட்டுநர் – தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ் (Video)