லிட்டில் இந்தியாவிலுள்ள குடியிருப்பில் தீ.. 20 பேர் வெளியேற்றம் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

fire at Little India
SCDF/Facebook

லிட்டில் இந்தியாவிலுள்ள HDB குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் பிளாக் 662 Buffalo சாலையில் அமைந்துள்ள மூன்றாவது மாடி வீட்டில் தீ விபத்து குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஃபேஸ்புக் பதிவில் கூறியது.

சிறுவன் போல நடித்து, சிறுமியிடம் ஆசையை தீர்த்துக்கொண்ட 44 வயது ஆடவர் – 18 பிரம்படி, 19 ஆண்டுகள் சிறை

SCDF வருவதற்கு முன்னரே, பாதிக்கப்பட்ட வீட்டின் படுக்கையறையில் சிக்கி இருந்த ஆடவர் ஜன்னல் வழியாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களால் பத்திரமாக மீட்கப்பட்டார் என்றும் SCDF கூறியது.

அதன் பின்னர் அந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த தீயை, இரண்டு தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவிகள் பயன்படுத்தி SCDF அணைத்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பிளாக்கில் இருந்து சுமார் 20 குடியிருப்பாளர்களை அவர்கள் வெளியேற்றினர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை தொடர்கிறது.

வாடகை வண்டிக்கு $40 கட்டணத்தை கொடுக்காமல் தப்பித்து சென்ற பயணி.. நீண்ட நேரம் காத்திருந்த ஓட்டுநர் – வருத்தத்துடன் பதிவு