சிங்கப்பூரில் 16 வயது சிறுவன் போல நடித்து, 12 வயது பள்ளி மாணவியை நாசம் செய்த ஆடவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் நட்பு கொண்ட ஆடவர், பின்னர் சிறுமியை சந்திக்க ஏற்பாடும் செய்துள்ளார்.
தெம்பனீஸ் அவென்யூ 4ல் இரட்டை அடுக்கு பேருந்தில் தீ
அதன் பின்னர், சிறுமி தன்னைவிட வயது குறைந்தவள் என்பதை அறிந்தும் சிறுமியுடன் மூன்று முறை அவர் உறவு கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்தை செய்த மொகம்மத் ஹுத்ரி அஹ்மத் (இப்போது 44 வயதாகிறது) பாலியல் நாசம் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை கடந்த அக். 16 (திங்கட்கிழமை) அன்று ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 18 பிரம்படியும் விதிக்கப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
மேலும் 12 மற்ற குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இருவரும் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2019 நவம்பர் வரை மொத்தம் நான்கு முறை சந்தித்துள்ளனர்.
அதில் மூன்று முறை, அந்த சிறுமியை வற்புறுத்தி தன் ஆசைக்கு அவர் இணங்க வைத்ததாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அனைத்தும் நிராகரிப்பு