பான் ஹெங் (Ban Heng) உணவக சமையலறையில் புகை வெளியேற்றும் குழாயில் நேற்று (நவம்பர் 23) தீ பற்றி விபத்து ஏற்பட்டது.
அதனை அடுத்து, பூன் கெங்கில் உள்ள HDB பிளாக்கில் இருந்து சுமார் 20 பேர் சுயமாக வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா: இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் பாதிப்பு!
மாலை 5.10 மணியளவில் பிளாக் 22 பூன் கெங் சாலையில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.
அந்த பான் ஹெங் உணவகம், HDB பிளாக்கின் தரை தளத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் கடையின் குழாய்க்குள் தீ பற்றி எரிவதும் மற்றும் கருப்பு நிற புகை வெளியேறுவது, அது தொடர்பான புகைப்படங்களில் காண முடிகிறது.
சிங்கப்பூரில், மோசடி SMS அல்லது Call தொல்லையா? பாதுகாப்பு செயலி அறிமுகம்!