தீ விபத்து… 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

SCDF/Facebook

டெலோக் பிளாங்கா கிரசெண்டில் (Telok Blangah Crescent) உள்ள HDB பிளாக்கில் நேற்று (ஆக. 6) மாலை தீ விபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூர் குடிமை பாதுகாப்புப் படையின் (SCDF) ஃபேஸ்புக் பதிவின்படி, தீ பிளாக்கின் 9வது மாடியின் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

மற்றவர்களின் உடமைகளை போட்டோ எடுக்கும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

அன்று இரவு 8 மணியளவில் தீ சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் தண்ணீர் ஜெட் கருவிகள் மூலம் தீயை அணைத்ததாகவும் SCDF தெரிவித்துள்ளது.

அங்கு 9வது முதல் 12வது மாடி வரை உள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் SCDF மற்றும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

எட்டு பேர் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்களில் நான்கு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை தொடர்கிறது.

வெளிநாட்டு ஊழியர்களையே அதிகம் சார்ந்திருக்கும் லிட்டில் இந்தியா