மற்றவர்களின் உடமைகளை போட்டோ எடுக்கும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Man lodges police report after stranger takes photos
Photo: Stomp

செங்காங்கில் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கில், நிறுத்தி இருந்த காரை முன்பின் தெரியாத நபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (செப் 5) நள்ளிரவு 12.07 மணிக்கு காம்பஸ்வேல் (Compassvale) கார்டனில் நடந்ததாகக் Stomp கூறியுள்ளது.

சிங்கப்பூரில் பகுதிநேர வீட்டு பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு

சந்தேகத்திற்கிடமாக, நள்ளிரவில் தனது காரின் புகைப்படங்களை ஒருவர் எடுத்ததாகவும், அது தன் கார் கேமராவில் பதிவாகியுள்ளது என்றும் ஸ்டாம்பிடம் ஒருவர் கூறியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது, அவர்கள் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

அனைவரும் இது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறியவே இதைப் பகிர்வதாக அவர் கூறினார்.

ஆகவே, அடுத்தவர்களை அல்லது மற்றவர்களின் உடமைகளை போட்டோ எடுக்கும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தொழில்துறை கட்டிடத்தில் வெளிநாட்டவர் உட்பட 5 பேர் கைது – தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்