சிங்கப்பூரில் லோர்னி (Lornie) நெடுஞ்சாலையில் நடந்த (மார்ச் 7) விபத்தில், 9 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
லோர்னி சாலையில் ஆடம் (Adam) சாலை செல்லும் வழியில் இரண்டு கார்கள் மோதிய விபத்து குறித்து மாலை 4.25 மணியளவில் எச்சரிக்கப்பட்டதாக போலீசார் CNAவிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 8 புதிய நபர்கள் COVID-19 தொற்றுநோயினால் பாதிப்பு..!
இந்த சம்பவத்தில், 32 மற்றும் 41 வயதுடைய இரண்டு ஆண் ஓட்டுநர்களும், 32 மற்றும் 36 வயதுடைய இரண்டு பெண் பயணிகளும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், சிறுமி கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர் என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க : COVID-19 பற்றி கூறி சிங்கப்பூர் மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய இருவர் கைது..!