COVID-19 பற்றி கூறி சிங்கப்பூர் மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய இருவர் கைது..!

Two teenagers arrested over assault on Singaporean student in London
Two teenagers arrested over assault on Singaporean student in London (Photo: London Metropolitan Police)

லண்டன் : கடந்த மாதம் ஆக்ஸ்போர்டு ஸ்ட்ரீட்டில் சிங்கப்பூர் மாணவர் மீது இனரீதியாக மோசமான தாக்குதல் நடைபெற்றது.

இது தொடர்பாக இரண்டு டீனேஜ் சிறுவர்கள், அதாவது 15 வயது மற்றும் மற்ற 16 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் (மார்ச் 6) தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19 பற்றி கூறி மாணவர் மீது இனவெறி தாக்கு; சிங்கப்பூர் தூதரகம், UK அதிகாரிகளுடன் தொடர்பு…!

கடந்த பிப்ரவரி 24 அன்று டோட்டன்ஹாம் கோர்ட் (Tottenham Court) சாலை நிலையத்திற்கு அருகிலுள்ள ஆக்ஸ்போர்டு ஸ்ட்ரீட் பகுதிக்கு அதிகாரிகள் இரவு 9.15 மணியளவில் அழைக்கப்பட்டதாக அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில், பெருநகர காவல்துறை (மெட் போலீஸ்) தெரிவித்துள்ளது.

இதில் 16 வயதுடையவ சிறுவர், புதன்கிழமை கைது செய்யப்பட்டு, விசாரணையில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மற்றொரு சந்தேக நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு இந்த மாத இறுதி வரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை அடையாளம் காண போலீசார் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

லண்டனில் நடந்த சம்பவத்தில், தனது இனம் மற்றும் COVID-19 பற்றி வழிப்போக்கர்கள் பேசியதாகவும், அதற்கு பின்னர் தாக்கப்பட்டதாகவும் 23 வயதான UCL மாணவர் ஜொனாதன் மோக் தெரிவித்திருந்தார்.

போலீசார் வருவதற்குள் தாக்குதல் நடத்திய குழு அங்கிருந்து சென்றுவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பொது மருத்துவமனை வார்டுக்குள் COVID-19 தொற்று பரவுகிறதா? – சுகாதார அமைச்சகம் விசாரணை..!

பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர், கைகளால் குத்தப்பட்டும் உதைக்கப்பட்டும் தாக்கப்பட்டார், மேலும் இதன் காரணமாக அவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது என்று மெட் போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் மாணவர் ஜொனாதன் மோக்கின் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை உறுதி செய்வதற்காக லண்டன் போலீசாருடன் தொடர்பு கொண்டுள்ளதாக சிங்கப்பூர் High Commission கடந்த மார்ச் 4ஆம் தேதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source : CNA

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil