AYE விரைவுச்சாலையில் லாரிகள், வேன்கள், டாக்ஸி மோதி விபத்து

five-vehicle-chain-collision-aye
Telegram & Singapore Road Accident/FB

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) ஐந்து வாகனங்கள் சங்கிலி தொடராக மோதியதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

​​நேற்று செப். 21 நடந்த இந்த விபத்தில் 2 டிப்பர் லாரிகள், 2 வேன்கள் மற்றும் 1 டாக்சி ஆகியவை விபத்தில் சிக்கின.

லாரி மீது மரம் விழுந்து கடும் விபத்து விபத்து.. பயணம் செய்த 3 பேர் நிலை என்ன என்று தெரியவில்லை

வேன்கள் மற்றும் டாக்சிகளில் மேலே சிமெண்ட் கொட்டி மூடியிருப்பது போல தெரிகிறது.

செப். 21 காலை 10:20 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் துவாஸ் நோக்கி செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்தது.

இதில் 35 வயதான பெண் வேன் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூர் தீமிதி திருவிழா: பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயம் – முழு விவரம் வெளியீடு