தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான விமான பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை வந்தே பாரத் சிறப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கான விமானங்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மாலில் ஒருவர் தலையில் சூப்பை ஊற்றி, கையை கடித்ததாக பெண் ஒருவர் கைது..!
சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கும் 6ஆம் கட்டமாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அது குறித்து நாம் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு, அதாவது திருச்சியில் இருந்து வரும் 25ஆம் தேதி முதல், அதே போல சென்னையில் இருந்து வரும் 26ஆம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
#FlyWithIX : Bookings open for VBM flights till 3️⃣0️⃣th NOVEMBER 2️⃣0️⃣2️⃣0️⃣.
India ➡️ Singapore
Bookings can be done by
🔅logging on to our website
🔅contacting our call centre
🔅visiting our city offices
🔅through authorized travel agents pic.twitter.com/zx1WmDrzSf— Air India Express (@FlyWithIX) October 15, 2020
முன்பதிவு எங்கு செய்யலாம்?
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் செய்யலாம்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அழைப்பு மையத்தை (call centre) தொடர்புகொள்ளலாம்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நகர அலுவலகங்களில் செய்யலாம்
- அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்
இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்திற்கு தொற்று பாதித்த நபர்கள் சென்றுள்ளனர்..!