ஸ்கூட் விமானத்தில் வந்த பயணியிடம் 20.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஸ்கூட் விமானத்தில் வந்த பயணியிடம் 20.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் வந்த பயணியிடம் சுமார் 20.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூர் ஆஃபர்: பாதி விலையில் அதிரடி தள்ளுபடி விற்பனை – பிப்.21 முதல் 25 வரை

கடந்த மார்ச் 17- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்து பயணிகளுடன் ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் (Scoot Airlines) TR-540 என்ற எண் கொண்ட விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் (Coimbatore International Airport) தரையிறங்கியது. அப்போது, அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 24 கேரட் 6 தங்க செயின்கள், 22 கேரட் 1 தங்க செயின், 22 கேரட் 1 நெக்லஸ் ஆகியவை சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்

அந்த கடத்தல் தங்க செயின்களைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவற்றின் மதிப்பு ரூபாய் 20.71 லட்சம் எனத் தெரிவித்துள்ளனர். அந்த பயணியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அந்த பயணி இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிய வந்தது.