மஞ்சள் நிற பாக்ஸ் குறிக்கப்பட்ட சாலைகள், சாலை பயனர்களுக்கு ஆபத்தானவை.
சாலை பயனர்கள் இந்த மஞ்சள் நிற குறிகளுக்குள் தங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை, ஏனெனில் வாகனங்கள் இயங்காமல் இருக்கும்போது சிறிய பக்க சாலையில் இருந்து வரும் வாகனங்கள் முக்கிய சாலையில் நுழைய வேண்டும்.
சிங்கப்பூரில் இளைஞர் ஒருவருக்கு வெட்டு…சந்தேக நபர் கைது!
அத்தகைய மஞ்சள் நிற குறியிடப்பட்ட சாலை ஒன்றில், உணவு விநியோக மோட்டார் சைக்கிளுக்கும் காருக்கும் இடையில் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டுள்ளது.
Roads.sg என்ற பேஸ்புக் பக்கத்தின்படி, ஜனவரி 8ஆம் தேதி காலை 11 மணிக்குப் பிறகு, The Madeira condominium-க்கு வெளியே புக்கிட் படோக் ஸ்ட்ரீட் 31இல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இணையத்தில் பகிரப்பட்ட சம்பவத்தின் காணொளியில், மோதலுக்கு சில நிமிடங்கள் முன்பு என்ன நடந்தது என்பதைக் காட்டியது.
சாம்பல் நிற கார் மெதுவாக முன்னேறத் தொடங்கையில், எதிர் திசையில் இருந்து வரும் அடர் நீல நிற கார் ஒன்று மஞ்சள் குறியில் condominium நோக்கி திரும்புவதை காணமுடிகிறது.
பின்னர் உணவு விநியோகம் செய்யும் மோட்டர் சைக்கிள் அதன் உள்ளே நுழைந்து, அடர் நீல நிற கார் மீது மோதியதையும் காணமுடிகிறது.
அதன் பின்னர், மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் பறந்து சாலையில் விழுவதை காணமுடிகிறது. அவர் சுயநினைவுடன் இருப்பதும் தெரிகிறது.
.
சாலை விதிகளை முறையாக பின்பற்றி, இதுபோன்ற விபத்துகளில் இருந்து நம்மை காத்துகொள்வோம்.
புதிதாக 23 பேருக்குக் கிருமித்தொற்று – சமூக அளவில் இருவர் பாதிப்பு!