சிங்கப்பூர் தேசிய தினத்தன்று எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
Woodlands Avenue 1ல் Woodgrove வழியாக, Foodpanda ஓட்டுநர் ஒருவர் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பார்வையாளர்களுக்கு கையசைக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தேசிய தினத்தன்று பிறந்த முதல் குழந்தைகளை வரவேற்ற சிங்கப்பூர்..!
அந்த ஓட்டுநர் பெயர் அப்துல் ரஹ்மான், அவர் ஒரு வருடமாக ஃபுட்பாண்டாவில் பணிபுரிந்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
நேற்று ஆகஸ்ட் 9 மதியம் Esso பெட்ரோல் நிலையத்தின் அருகில் ஆர்டர் எடுக்க சென்று கொண்டிருந்தார்.
அப்போது NDP மொபைல் column வரிசையின் வழியில் அவர் சென்றுகொண்டு இருப்பதை கண்டார். தன்னிச்சையாக, கேளிக்கை செய்ய முடிவு செய்தார்.
Foodpanda deliveryman finds himself behind Marsiling mobile column, waves to onlookers https://t.co/78H7h5YCid Video via Tong Chen Hao pic.twitter.com/nE39NmHbbK
— Mothership.sg (@MothershipSG) August 9, 2020
அந்த அணி வகுப்பின் பின்னால் சென்று கொண்டிருந்த எனக்கு ஆச்சரியப்படும் விதமாக, சத்தமாக ஆரவாரம் கிடைத்தது என்று அவர் கூறியுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பார்வையாளர்களுக்கு கையசைத்து ஆரவாரம் செய்தார்.
அந்த நேரத்தில் தனது உணவு கொன்று செல்லும் பையில் எதுவும் இல்லை என்று அவர் Mothershipக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் காணொளி வைரஸ் ஆக என்ன செய்தேன் என்பதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஆள்குறைப்பு நடவடிக்கையின்போது நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம்..!