சிறுமி ஒருவரிடம் தன்னுடைய பிறப்புறுப்பை காட்டிய வெளிநாட்டு ஆடவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12 வயது நிரம்பிய சிங்கப்பூர் சிறுமியிடம் பிறப்புறுப்பை காட்டிய 26 வயதான தைவான் இளைஞருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 5ஆம் தேதி அன்று இரவு 8:52 மணிக்கு இரவு உணவை வாங்கச் சென்று கொண்டிருந்த ஜாங் குய் என்ற அந்த ஆடவர், செக்ஸியாக ஆடை அணிந்த பெண்ணை பார்த்தார்.
அதனை கண்டு கிளுகிளுப்பான அவர், சுயஇன்பத்தில் ஈடுபடுவதற்காக பிளாக்கின் அடித்தளத்தில் உள்ள ஒரு மூலைக்குச் சென்றார்.
அப்போது குழந்தை நடந்து செல்வதைப் பார்த்த அவர், அருகில் உள்ள MRT நிலையத்திற்கு வழி கேட்பது போல் நடித்துள்ளார். தனது அந்தரங்க உறுப்பை மறைக்க குடை ஒன்றையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
சிறுமி அதற்கு பதில் கூறிக்கொண்டு இருக்கும்போது, ஜாங் குடையை நகர்த்தி, “இது உனக்கு பிடிக்குமா?” என்று அந்த சிறுமியிடம் கேட்டார்.
அதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து விலகி, “ஓ மை குட்னெஸ்” என்று கத்திகொண்டே ஓடினார். ஆடவர் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதுபற்றி அந்த சிறுமி தன் அம்மாவிடம் கூற, அடுத்த நாள் அவர் போலீசிடம் புகார் செய்தார். மொத்தம் 30 மனித மணிநேரம் செலவிட்ட சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியைக் கண்டுபிடித்தது.
ஜாங், நாள் ஒன்றுக்கு 14 மணி நேரமும் வேலை செய்கிறார் என்றும், சோர்வின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைக்க ஆபாச காட்சிகளை பார்க்க தொடங்கினார் என்றும் அவரின் வழக்கறிஞர் கூறினார்.
மேலும், ஜாங் தான் செய்ததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தன்னை மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கையில் மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் சிக்கனுக்கு கிராக்கி – இனி சிக்கன் பிரியர்களின் நிலை என்ன?