Bedok Reservoir சாலையில் ஆபத்தில் இருந்த மூதாட்டிக்கு ஓடி உதவிய ஊழியரை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
புதன்கிழமை காலை (அக் 4) காலை 11.20 மணியளவில், கார்பார்க்கில் உள்ள நடைபாதையில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி கீழே விழுந்துள்ளார்.
அவருடன் சென்ற உறவினர் பெண், மூதாட்டியை தூக்கி நிறுத்த முடியாமல் சிரமத்தில் தவித்துள்ளார்.
இதனை அடுத்து அருகே தோட்டத்தில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவரிடம் உதவி கேட்க ஓடினார்.
இதை கேட்ட ஊழியர் வேலையை உதறிவிட்டு விரைந்து சென்று மூதாட்டியை தூக்கி அமரவைத்தார்.
பின்னர் அருகிலுள்ள இருக்கை பகுதியில் அவரை அமரவைத்து அவர்களுக்கு தேவையானதை செய்து உதவினார்.
இந்த செயல்களை கண்ட ஸ்டாம்ப் வாசகர், என்னுடைய நாளை இது மகிழ்ச்சியாக மாற்றியது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.