வெளிநாட்டில் வேலை செய்வோரின் மனைவிகள் தான் டார்கெட் – வலையில் சிக்கும் பெண்கள்

foreign workers wife target teacher arrested
Pixabay

தமிழ்நாடு நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் 32 வயதான உடற்கல்வி ஆசிரியர், பெண்களை குறிவைத்து பலே வேலையில் ஈடுபட்டது அம்பாலானது.

அதே பள்ளியில் 11 வது படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது புகார் எழுந்த நிலையில் அவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

“பயிற்சி இல்லாத வேலையை பார்க்க சொன்னா என்ன பண்றது” – இரு ஊழியர்களின் மரணமும்.. நிறுவனத்தின் அஜாக்கிரதையும்..

அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் பல மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் தனது வலையில் சிக்க வைத்தது வெளிச்சத்துக்கு வந்தது.

அவரின் கைப்பேசியில் பல பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ஆபாச உரையாடல்களும் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பல தனியார் பள்ளிகளில் வேலை பார்த்துவந்த இந்த ஆசாமி, அங்கு வேலை பார்த்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுடன் பழக்கமாவதை வழக்கமாக்கி வந்தது தெரியவந்தது.

மேலும், ஆசை வார்த்தை கூறி அவர்களை தனது வலையில் விழவைத்து வந்துள்ளார் இந்த ஆசாமி.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களின் மனைவிகளை குறிவைத்து இந்த வேலையை அவர் செய்து வந்துள்ளார்.

மாணவிகள் மட்டுமல்லாமல் அவர்களின் தாயார்களிடமும் அவர் தொடர்பு வைத்திருந்ததும் அம்பலமானது.

அவர்களிடம் பேசும்போது ரகசியமாக படமெடுக்கும் வேலையையும் அவர் வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

அவரின் தொடர்பில் இருந்த ஆசிரியர் ஒருவருக்கு 2 குழந்தைகள் இருந்ததும், அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

சக ஆசிரியர் என பழகிய அந்த பெண்ணிடம் அவர் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியதாகவும், பின்னர் அவரின் பழக்கத்தை துண்டித்து கொண்டதாகவும் அவர் கண்ணீருடன் கூறினார்.

அவர் பல காணொளிகளை புகைப்படங்களையும் அழித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உடற்கல்வி ஆசிரியரை தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்கவும் உள்ளதாக தமிழ் ஊடகங்கள் கூறியுள்ளன.

பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர் கவனத்திற்கு.. ஜூன் 1 முதல் இதை மட்டுமே பயன்படுத்த முடியும்