18வது மாடியில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டவர்.. மரத்தில் விழுந்து பரிதாப மரணம்

foreigner-fall-die-neptune-court
Shin Min Daily News

மரைன் பரேடில் உள்ள நெப்டியூன் கோர்ட் காண்டோ குடியிருப்பின் 18வது மாடியில் இருந்து விழுந்த ஆடவர் ஒருவர் மரணித்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஜனவரி 29 அன்று மாலை 4:50 மணியளவில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்

மாடியில் இருந்து விழுந்த ஆடவர் கீழே உள்ள மரத்தில் விழுந்து இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே 46 வயதுடைய அவர் உயிரிழந்ததாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என்றும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

அன்று மாலை 4:55 மணியளவில் 2 மரைன் விஸ்டாவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) கூறியது.

பின்னர், அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உறுதி செய்து SCDF துணை மருத்துவர் அறிவித்தார்.

இதனை அடுத்து, அந்த ஆடவரின் 55 வயது மனைவி சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கணவன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவி கதறி அழுததாக குடியிருப்பாளர்கள் கூறினர்.

இறந்தவர் வெளிநாட்டவர் என்றும் ஷின் மின் தெரிவித்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்

சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்