தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், நேற்று (நவ.01) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை
சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக முதுகு வலியால், கடும் அவதிப்பட்டு வந்ததாகவும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூருக்கு வந்துள்ளதாகவும், சில நாட்கள் சிகிச்சைப் பெறும் அவர், அக்டோபர் 07- ஆம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.