சிங்கப்பூரில் நோய்ப்பரவல் குழுமங்களாக முன்னர் பட்டியலிடப்பட்ட மேலும் நான்கு தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று இல்லாத இடமாக சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.
- 2D Jalan Papan இல் உள்ள Avery Lodge தங்கும் விடுதி
- 15 Penjuru Walk-ல் உள்ள Cassia @ Penjuru
- 6 Tuas South Street 15இல் உள்ள CDPL Tuas தங்கும் விடுதி
- 1 Tuas South Street 12ல் உள்ள Tuas South தங்கும் விடுதி
இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று சோதனை முடிவு – 23,300 பேர் தனிமை..!
பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றுகள் முற்றிலும் இல்லை, தற்போது குணமடைந்தவர்களும் மற்றும் சமீபத்தில் COVID-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.
COVID-19 தொற்றிலிருந்து 694 நபர்கள் மீண்டு மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் MOH குறிப்பிட்டுள்ளது.
மொத்தம் 49,609 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.
மேலும் 112 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை என்றும் MOH தெரிவித்துள்ளது.
மேலும் 5,544 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனுடன் சேர்த்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 27ஆக உள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 11,000 பொதுப்போக்குவரத்து ஊழியர்களுக்கு நோய்த்தொற்று சோதனை..!