சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடம் உட்பட புதிதாக 4 கிருமிப்பரவல் குழுமங்கள் அடையாளம்..!

Four new COVID-19 clusters have been identified
Four new COVID-19 clusters have been identified (Photo: Dailytimes)

சிங்கப்பூரில் COVID-19 நோய் பரவல் குழுமங்களாக புதிதாக மேலும் 4 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மேலும் COVID-19 தொற்றிலிருந்து 338 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : IKEA அலெக்ஸாண்ட்ரா திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் தற்காலிகமாக மூடல்..!

நோய் பரவல் குழுமங்கள்

  • 713 Hougang அவென்யூ 2 இல் அமைந்துள்ள The Florence Residences கட்டுமானத் தளம்
  • 79 காக்கி புக்கிட் இன்டஸ்ட்ரியல் டெரஸ் (79 Kaki Bukit Industrial Terrace)
  • 208 உட்லேண்ட்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க் E5
  • 230 உட்லேண்ட்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க் E5 ஆகிய மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடம்.

மொத்தம் 37,163 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 174 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 5,883 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26ஆக உள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட குழுவினருக்கு எல்லை தாண்டிய பயணத்தை அனுமதிக்க சிங்கப்பூர், மலேசியா ஒப்புதல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg