கெயிலாங்கில் உள்ள உணவகத்தின் சமையலறையில் நேற்று (ஜனவரி 20) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
மாலை 3.40 மணியளவில், 35 லோரோங் 11 கெய்லாங்கில் தீ விபத்து குறித்து புகார் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.
வெளிநாட்டு ஊழியர்களிடையே அடிதடி: “பொழைக்க வந்த இடத்துல இதல்லாம் தேவையா?” – சக ஊழியர்கள் காட்டம்
இந்த தீயானது கடை சமையலறையில் உள்ள அடுப்பு மற்றும் சமையலறை புகை வெளியேற்றும் குழாயில் ஏற்பட்டதாக SCDF செய்தித் தொடர்பாளர் கூறினார்.
SCDF வருவதற்கு முன்னரே, பொதுமக்கள் இரண்டு தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
அதே போல பாதிக்கப்பட்ட கடையில் இருந்து மூன்று பேர் சுயமாக வெளியேறினர்.
இதில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
“சுத்தியலை வச்சி மண்டையை உடைச்சிருவேன்” – பணியில் இருந்த ஊழியர்களுக்கு மிரட்டல்