இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் உயிரிழந்த சிங்கப்பூர் பெண்

go-kart-accident-singapore-woman-dies-batam
IDN Times

இந்தோனேசியாவின் படாமில் நடந்த விபத்தில் 33 வயதான சிங்கப்பூர் பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

நேற்று பிப்ரவரி 21 அன்று, கோ-கார்ட் என்னும் விளையாட்டு காரில் பயணித்த போது இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

Work permit மற்றும் S$482.80 பணத்துடன் கீழே கண்டெடுக்கப்பட்ட பர்ஸ்.. உரியவரிடம் சேர உதவுங்கள்

இந்தோனேசியா நேரப்படி இந்த சம்பவம் மாலை 3:30 மணியளவில் கோல்டன் சிட்டி கோ-கார்ட், பெங்காங்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கோ-கார்ட் காரில் அவரின் நீண்ட கூந்தல் சிக்கி சுற்றிக் கொண்டு இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அங்கு அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

லாரியில் பயணித்த 7 நண்பர்கள்.. மரத்தில் மோதி விபத்து.. இருவர் மரணம் – ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை