ஏப்.23- ஆம் தேதி ஸ்ரீ சிவன் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிப்பு!

Photo: Hindu Endowments Board

சிங்கப்பூரில் உள்ள 24 கேலாங் ஈஸ்ட் அவென்யூ- 2ல் (24 Geylang East Ave 2) ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple) அமைந்துள்ளது. இந்த கோயிலில் வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று குருபெயர்ச்சி விழா (Guru Peyarchi Prayers) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

அரசுமுறைப் பயணமாக கியூபா சென்றுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

இது தொடர்பான அறிவிப்பில், “வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று அதிகாலை 01.52 AM மணியளவில் குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைக்கிறார். பரிகார அர்ச்சனை காலை 06.30 மணி முதல் காலை 09.00 மணி வரையும், காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், மாலை 06.00 மணி முதல் இரவு 08.30 மணி வரையும் நடைபெறும். பரிகார சகஸ்ரநாம மாலை 06.30 மணி முதல் இரவு 07.30 மணி வரையும் நடைபெறும்.

“பாஸ்போர்ட், விசா தொடர்பான சேவைகளில் புதிய மாற்றங்கள்”- இந்திய தூதரகம் அதிரடி அறிவிப்பு!

ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று காலை 07.00 மணிக்கு யாகசாலை பூஜை ஹோமமும், காலை 09.00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, தீபாராதனையும், காலை 09.30 மணிக்கு சந்தன குட அபிஷேகமும், காலை 10.00 மணிக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரக தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், காலை 11.15 மணிக்கு மஹா தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகமும், இரவு 07.30 மணிக்கு உபய பூஜையும், இரவு 08.00 மணிக்கு மஹா தீபாராதனை, சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

சந்தன குடம் செலுத்த விரும்புவோர், அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 67434566 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.