லண்டனில் நாளை (செப்.19) திங்கட்கிழமை நடைபெறும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு முறை இறுதிச் சடங்கில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொள்ள உள்ளார்.
அதிபர் ஹலிமாவின் கணவர் முகம்மத் அப்துல்லா அல்ஹாப்ஷி, அதிபர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் (MFA) அதிகாரிகளும் அவருடன் கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் கடும் தீ… உள்ளே இருந்த சுமார் 25 ஊழியர்கள்: விரைந்த SCDF
96 வயதுடைய ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார்.
அவரின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கான உலகத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இறுதிச் சடங்கு அரச குடும்பங்கள் கலந்துகொள்ளும் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.