தீபாவளியையொட்டி, சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் சார்பில் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 18- ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள கலா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியை இலங்கை தூதர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள், இலங்கை சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சர்வமத அமைப்புகளின் தலைவர்கள், சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டனர்.

“53 வயது நபரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

பரத நாட்டியம், இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. பின்னர், அனைவருக்கும் சிறப்பு விருந்தும் அளிக்கப்பட்டது. விருந்தில் ஜாமூன், மசால் வடை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது.