உங்களுடைய சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக வழங்கலாம்!

CDC Vouchers

சிங்கப்பூரில் வசிக்கும் ஒவ்வொரு சிங்கப்பூரர்களின் குடும்பங்களுக்கும் தலா 100 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை (CDC Vouchers) சிங்கப்பூர் அரசு வழங்கியுள்ளது. இந்த பற்றுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் 2022 டிசம்பர் 31- ஆம் தேதி வரை மட்டுமே. இன்னும் சரியாக 10 நாட்களே உள்ள நிலையில், பற்றுச்சீட்டுகளில் நீங்கள் செலவு செய்தது போக, மீதமுள்ள தொகையை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். விருப்பம் உள்ளவர்கள் https://vouchers.cdc.gov.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, குறிப்பிட்டுள்ள தொண்டு நிறுவனங்களின் பெயர் பட்டியலைப் பார்வையிட வேண்டும்.

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என அறிவிப்பு!

பின்னர், தொண்டு நிறுவனத்தின் பெயரைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின்பு, சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளில் உள்ள தொகையை ‘சிங்பாஸ்’ வழியாக, சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கலாம்.

பூனையின் நினைவிடத்தில் பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்திய சிங்கப்பூரர்கள்! – அகால மரணமடைந்த பூனை!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://vouchers.cdc.gov.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் (அல்லது) https://www.youtube.com/watch?v=ht6cCIce1Es&t=20s என்ற யூடியூப் பக்கத்திற்கு சென்றும் தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.