இந்திய குடியரசுத் தினம்- சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அழைப்பு!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

வரும் ஜனவரி 26- ஆம் தேதி அன்று இந்தியாவில் குடியரசுத் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் குடியரசுத் தின விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்துள்ளது.

உணவக சமையலறையில் தீ… துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த பொதுமக்கள்

அந்த வகையில், சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் (High Commission of India in Singapore) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்தியாவின் 74- வது குடியரசுத் தினத்தையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கிரேஞ்ச் சாலையில் (31 Grange Road) அமைந்துள்ள இந்திய தூதரகத்தில், வரும் ஜனவரி 26- ஆம் தேதி அன்று காலை 09.00 மணிக்கு இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த விழாவில், சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களிடையே அடிதடி: “பொழைக்க வந்த இடத்துல இதல்லாம் தேவையா?” – சக ஊழியர்கள் காட்டம்

சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றவிருக்கிறார். விழாவில், இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அனைவரும் கலந்துக் கொள்கின்றனர். இந்திய குடியரசுத் தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.