பயணிகளுக்கு நற்செய்தி: இந்தியா-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்கள்!

India-Singapore flights
(Photo: Reuters)

இந்தியா-சிங்கப்பூர் இடையே பயண திட்டம் கொண்ட பயணிகளுக்கு ஒரு நற்செய்தி.

ஏர் இந்தியா விமான நிறுவனம் வரும் ஜனவரி 1 முதல் மார்ச் 27 வரை இந்தியா-சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

பயங்கர ஆயுதங்களுடன் கலவரம்…மேலும் 7 பேர் கைது!

இந்த விமானம் டெல்லி – பெங்களூரு – சிங்கப்பூர் – பெங்களூரு – டெல்லி என்ற வழி தடத்தில் செல்லும் என்றும் அது கூறியுள்ளது.

மேலும், இதற்கான முன்பதிவையும் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

விமான டிக்கெட்டுகளை, ஏர் இந்தியா வலைத்தளம், முன்பதிவு அலுவலகங்கள், கால் சென்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் நீங்கள் செய்யலாம் என்றும் அது கூறியுள்ளது.

ஆசியாவில் முதல் நாடாக சிங்கப்பூர் வந்தடைந்த COVID-19 தடுப்பூசி மருந்து!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…