“தமிழில் பேசுவோம், தமிழை நேசிப்போம்” – சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா!

Indian Muslims organized Tamil Mozhi vizha
Singapore Indian Muslims organized Tamil Mozhi vizha

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இந்திய முஸ்லீம் பேரவை சார்பில், “தமிழ் மொழி விழா” நேற்று நடைபெற்றது.

செம்மொழியான தமிழ் மொழியின் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் ஆண்டுதோறும் தமிழ் மொழி விழா நடைபெறும்.

சிங்கப்பூர்-திருச்சி விமானத்தில் சோதனை.. கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல்!

அதன் அடிப்படியில், இந்தாண்டும் சிறப்பாக நடைபெற்றது, இதில் தமிழகத்தில் இருந்து யாரேனும் கவிஞர் அல்லது தமிழ் இலக்கியவாதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவர்.

இந்த வருடம், காணொலி மூலம் நடத்தப்பட்ட இந்த விழாவில் கவிஞர் யுகபாரதி கலந்துகொண்டார்.

மேலும், சிங்கப்பூர் நீ ஆன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி ரியானா ஹஸ்மியும் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டார்.

“இன்பத் தமிழும், இளைய தலைமுறையும்” என்ற தலைப்புடன் நடைபெற்ற தமிழ் விழாவில் தமிழின் சிறப்புகளை போல் உலகின் வேறு எந்த மொழிக்கும் சிறப்புகள் கிடையாது என்பது விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

தாம் எங்கு இருந்தாலும் தமிழை ஒருபோதும் மறக்காத தமிழர்களின் இந்த முயற்சியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இயந்திரத்தில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட முகக்கவசங்கள் – 10 பேரிடம் விசாரணை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…