இந்திய நாட்டுடனான சிங்கப்பூரின் VTL பயண ஏற்பாடு குறித்து இந்திய குடிமக்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதில், விமானங்களுக்கான தேவையில் திடீர் அழுத்தத்தை எதிர்கொள்வதாக பயண ஏஜென்சிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை, காற்று… வானிலை ஆய்வகம் கணிப்பு
குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை, திரு டில்லி பாபு என்பவர் சாங்கி விமான நிலையத்திற்குச் செல்வார்.
அங்குள்ள விமானங்கள் புறப்படும்போது, அவற்றில் ஒன்றில் தாம் இருப்பதாகவும், அதில் தனது சொந்த ஊருக்குப் பறந்து சென்று, சென்னையில் உள்ள தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது போன்றும் அவர் கற்பனை செய்வார்.
ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு, அது உண்மை அல்ல வெறும் கற்பனை என்பதை உணர்ந்த பின்னர், தோ பாயோவில் உள்ள தனது பிளாட்டுக்கு மீண்டும் செல்வார் அவர்.
உலகெங்கிலும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பயண எல்லைகளை மூடியதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அது அவரது வாடிக்கையாக உள்ளது.
“நான் மிகவும் ஏக்கமாக இருக்கிறேன், இரண்டு வருடங்களாக எனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை நான் பார்க்கவில்லை, எனவே விமான நிலையத்திற்குச் சென்று விமானங்களைப் பார்ப்பது எனது குடும்பத்தைப் பார்ப்பது போன்று எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.
திரு பாபு, சிங்கப்பூரில் உள்ள பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இருப்பினும், விமானத்தில் ஏறி சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற அவரது நம்பிக்கை விரைவில் நிறைவேறும்.
ஏனெனில், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே VTL சிறப்பு பயண திட்டம் வரும் நவம்பர் 29 அன்று தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நான் எப்போது திரும்பிச் செல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் பலர் (எனது துறையில்) வீட்டிற்குச் செல்ல வரிசையில் காத்திருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
“சிலருக்கு குழந்தைகள் உள்ளன அல்லது திருமணம் செய்து கொள்ள உள்ளனர், சிலருக்கு நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் உள்ளனர், எனவே இந்த நபர்கள் முதலில் முன்னுரிமை பெறுவார்கள்” என்றும் கூறினார்.
அவர் மீண்டும் அவரின் குடும்பத்துடன் இணைவார் என்ற நம்பிக்கையும், அவரை போல பல ஊழியர்கள் ஏக்கத்துடன் உள்ளனர், அவர்களும் விரைவில் நாடு திரும்புவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.