வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் கட்டுமான ஊழியர் ஒருவர் சக ஊழியரின் விரலை கடித்து துப்பியதாக முன்னர் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவத்தில், இந்திய ஊழியரான லோகன் கோவிந்தராஜ் (வயது 31) என்பவர், 42 வயதான முத்து செல்வத்தின் விரலின் ஒரு பகுதியை கடித்து துப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது.
பின்னர் குற்றம் நடந்த இடத்தில் விரல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அதை ஊழியரின் கையில் மீண்டும் இணைக்க முடியவில்லை.
இந்நிலையில், அவரைத் தாக்கிய லோகன் கோவிந்தராஜ்க்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை நேற்று (பிப். 25) விதிக்கப்பட்டது.
அவர் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இருவருமே இந்திய நாட்டை சேர்ந்த தமிழக ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது ?
சக கட்டுமான ஊழியரின் விரல் பகுதியை கடித்து துப்பிய வெளிநாட்டு ஊழியர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு