இண்டிகோ விமானத்தில் வாந்தி, மலம் கழித்த பயணி!

IndiGo flight returns Singapore baggage error
Twitter Page

இந்தியாவில் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines). இந்தியாவில் இருந்து உள்ளூர் நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவூதி அரேபியா, கத்தார், ஷார்ஜா, உள்ளிட்ட நாடுகளுக்கு இந்நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது.

‘டிபிஎஸ்’ வங்கியின் இணையதளச் சேவைகள் சீரானது!

இந்த நிலையில், கடந்த மார்ச் 26- ஆம் தேதி அன்று அசாம் மாநிலம், கவுகாத்தியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இருந்த மது அருந்திய பயணி ஒருவர், வாந்தி மற்றும் மலம் கழித்துள்ளார்.

அந்த பயணியின் செயல் சக பயணிகளைக் கோபமடையச் செய்தது. எனினும், விமான பணிப்பெண் சுவேதா, முகம் சுழிக்காமல், முகக்கவசத்தையும், கையுறையும் அணிந்துக் கொண்டு சுத்தம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, சில விமான பணிப்பெண்களும் அவருக்கு உதவிச் செய்தனர். சுத்தம் செய்த அந்த விமான பணிப்பெண்ணுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளப்பக்கங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் புதிய விதி

இது தொடர்பான வீடியோவை சுமார் 50,000- க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.