சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 71 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட நபர்களில் 18 வயது இளையரும் அடங்குவார்.
சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்
இந்த சோதனையில் S$157,000 மதிப்புள்ள போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக CNB இன்று (நவம்பர் 28) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
மேலும் பல்வேறு போதைப்பொருட்களும், சுமார் S$22,580 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த நவ.19 முதல் நவ.24 வரை நடந்த சோதனையில் ஆங் மோ கியோ, புக்கிட் பாடோக், கல்லாங் மற்றும் பொங்கோல் ஆகிய இடங்களும் அடங்கும்.
இதில் 24 வயதுடைய ஆடவர் ஒருவர் வீட்டில், போதைப்பொருட்கள் மற்றும் சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.