ஜாலான் ரெட்ஹிலில் உள்ள பிளாட்டில் 70 வயது முதியவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கடந்த டிச.4 அன்று இரவு 8 மணியளவில் தங்களுக்கு தகவல் வந்ததாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.
விரைந்து சென்று அங்கு பார்த்தபோது, முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த மரணத்தில் சதிச்செயல் ஏதும் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கவில்லை என கூறியுள்ளனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.