ஜுராங் ஈஸ்ட்டில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து மானபங்கம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி மாலை 5 மணியளவில், ஜூராங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 32 இல் உள்ள தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த ஆடவரால் தாம் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அந்த பெண் தெரிவித்துள்ளார் என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத கும்பலின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் மேலும் 52 பேர் கைது
கிளெமென்டி காவல் பிரிவின் அதிகாரிகள் தரை விசாரணைகள் மூலமாகவும், சி.சி.டி.வி கட்சிகளின் உதவியுடனும் அந்த இளைஞரின் அடையாளத்தை கண்டறிந்து, பின்னர் ஜனவரி 3ஆம் தேதி அவரை கைது செய்தனர்.
அவர் மீது இன்று ஜனவரி 5ஆம் தேதி நீதிமன்றத்தில் வீட்டை உடைந்து உள்ளே புகுந்த செயலுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.
சிங்கப்பூரில் நீண்டகால வேலை அனுமதி உடையோருக்கு தடுப்பூசி இலவசம்!
சட்டத்தின்படி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
பெண்ணை பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்காக, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இந்த தண்டனைகளின் ஏதேனும் கூட்டாக விதிக்கப்படலாம்.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கவனத்திற்கு… ஏர் இந்தியா!